தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது குறித்து...
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 நாள்கள் நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 27 தேதி நடைபெறுகிறது.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா திங்கள்கிழமை(ஏப்.13) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே எழுந்தருளினர். தொடர்ந்து 40 அடி உயர கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க 100 அடி நீளமுள்ள கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
Advertisement
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரைத் தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.