விருதுநகர்

சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அருப்புக்கோட்டை கிளையின் 12-ஆவது மாநாடு, மெக்கா தொடக்கப் பள்ளியில் கிளைத் தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

   அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் உலகநாதன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். கிளைச் செயலாளர் ராஜாராம் அறிக்கை வாசித்தார். அரசு ஊழியர் சங்கம் பொன்ராஜ், ராமராஜ், வருவாய் அலுவலர் சங்கம் ராமநாதன், வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்கம் மாயமாலை ஆகியோர் வாழ்த்தினர்.

   சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனியசாமி, பொருளாளர் சுப்புக்காளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக நாகஜோதி, செயலாளராக சோலைச்சாமி, பொருளாளராக சேஷன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

   மாவட்டச் செயலாளர் அய்யம்மாள் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாநாட்டில் 150 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT