ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்
விருதுநகர்ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி, ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. கல்லூரி செயலர் அ.திலீபன்ராஜா முகாமை குத்துவிளக்கேற்ற தொடங்கி வைத்தார். மக்கள் தொடர்பு அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.
கிருஷ்ணன்கோவில், சங்கரா கண் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர், கல்லூரியின் நிறுவனர், அண்ணாத்துரைச்செல்வனின் நினைவாக நடத்தப்பட்ட இந்த இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர். முகாமில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி தலைவர் சுந்தரி அண்ணாத்துரைச்செல்வன் செய்திருந்தார்.