முகப்பு
விருதுநகர்

மல்லியில் 768 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக் குழு தலைவர் வழங்கினார்

விருதுநகர்

மல்லியில் 768 பயனாளிகளுக்கு வேஷ்டி-சேலை: ஒன்றியக் குழு தலைவர் வழங்கினார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 10:16 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம், மல்லி ஊராட்சியில் 768 பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து  வழங்கினார்.

இதற்கான விழா மல்லியில் ஊராட்சி மன்றத் தலைவர் கே.முத்தம்மாள் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சுந்தர் வரவேற்றார்.பயனாளிகளுக்கு அரசின் விலையில்லா வேஷ்டி-சேலைகளை வழங்கி ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து பேசினார்.

நிகழ்சியில் ஒன்றியக் குழு துணைத் தலைவர் முத்தாலம்மாள் ராமசாமி, அ.தி.மு.க நிர்வாகிகள் மல்லி குருவையா, சந்தனம், முத்து, ரவி, நடராஜன், ஜோசப், ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →