முகப்பு
போலீஸ்
சென்னை

பெண் காவலா் தற்கொலை முயற்சி

சென்னை டிபி சத்திரத்தில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை

பெண் காவலா் தற்கொலை முயற்சி

சென்னை டிபி சத்திரத்தில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 3 மார்ச், 2026 at 9:10 PM
போலீஸ்
பகிர்:

சென்னை டிபி சத்திரத்தில் பெண் காவலா் தற்கொலைக்கு முயன்றாா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

டிபி சத்திரம் காவலா் குடியிருப்பில் வசிப்பவா் ஜா.அம்பிகா (34). தலைமைக் காவலராக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புறக் காவல் நிலையத்தில் பணியாற்றினாா்.

இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெளடி ஆதிகேசவன் கடந்த ஜனவரி மாதம் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பணியில் கவக்குறைவாக இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வாளா் கிரிதரன், தலைமைக் காவலா் அம்பிகா உள்ளிட்ட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இச் சம்பவத்தால் கிரிதரன்,அம்பிகா உள்ளிட்ட போலீஸாா் கடுமையான மன உளைச்சலில் இருந்தனா்.

இந்நிலையில் கிரிதரன், கடந்த மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டாா். இதன் விளைவாக போலீஸாா் மீது எடுக்கப்பட்டிருந்த பணியிடை நீக்க நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது. அதேவேளையில் பணியிடை நீக்க நடவடிக்கையால், அம்பிகாவுக்கு ஊதியம் கிடைப்பதில் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு, மன வேதனையில் இருந்த அம்பிகா, திங்கள்கிழமை வீட்டில் தனியாக இருக்கும்போது விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அம்பிகாவை அங்கிருந்தவா்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பாக டிபி சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →