கலசலிங்கம் பல்கலை.யில் பி.ஆர்க். நுழைவுத் தேர்வு நேட்டா மையம்: இந்திய கட்டடக்கலை கழகம் அனுமதி
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன், நேட்டா என்ற அகில இந்திய ஆர்க்கிடேக்சர்
விருதுநகர்கலசலிங்கம் பல்கலை.யில் பி.ஆர்க். நுழைவுத் தேர்வு நேட்டா மையம்: இந்திய கட்டடக்கலை கழகம் அனுமதி
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன், நேட்டா என்ற அகில இந்திய ஆர்க்கிடேக்சர்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். நுழைவுத் தேர்வு நேட்டா மையம் அமைக்க மும்பையில் உள்ள இந்திய கட்டடக்கலை கழகம் அனுமதி அளித்துள்ளது.இது குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் பி.கன்னியப்பன் (படம்) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் என்னும் கட்டடக்கலை பட்டப்படிப்பு உள்ளது. இதில் சேர்வதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றதுடன், நேட்டா என்ற அகில இந்திய ஆர்க்கிடேக்சர் கவுன்சில் கணினி மூலம் நடத்தும் நுழைவுத் தேர்வு எழுதி 40 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுக்க வேண்டும். இதுவரை இந்த நேட்டா தேர்வு எழுத சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும்.தற்போது மும்பையில் உள்ள ஆர்க்கிடேச்சர் கவுன்சில் ஆப் இந்தியா, கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். கட்டடக்கலை நுழைவுத் தேர்வு மையம் (நேட்டா மையம்) ஏற்படுத்திக்கொள்ள அங்கீகாரம் அளித்துள்ளது. இதற்கான ஆணை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் எங்கு சென்று பி.ஆர்க். படிக்க விரும்புவோரும், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க். படிக்க விரும்புவோரும் இங்கு இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். கணினி வாயிலாக இந்தத் தேர்வு நடக்கும்.தற்போது இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியும் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்படவுள்ளது. இங்குள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து ஒரு மாத பயிற்சிக்குப்பின் இந்த நுழைவுத் தேர்வை எழுதலாம். பயிற்சி மையத்தில் மிகவும் திறமைமிக்க கட்டடக்கலைத் துறை பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பதுடன், வெவ்வேறு புத்கங்கள் அடங்கிய ஆங்கில நூலகமமும் இடம்பெறும். பயிற்சி மையத்தில் சேர்வது மற்றும், நுழைவுத் தேர்வு குறித்து விவரம் அறிய 90003-61330 எனற செல்போனில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். அப்போது பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன், பேராசிரியர் டாக்டர் பி.ஜி.குருசாமிபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.