முகப்பு
விருதுநகர்

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு

மாணவிகள் பாதுகாப்புக் கருதி, காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிய தேர்வு மையம் ஏற்படுத்த, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்

Updated On : 9 ஜனவரி, 2013 at 2:14 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:27 PM

மாணவிகள் பாதுகாப்புக் கருதி, காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், புதிய தேர்வு மையம் ஏற்படுத்த, பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

   காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். பிளஸ் 2 மாணவிகள், பொதுத் தேர்வு எழுத, 2 கி.மீ., தூரமுள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லவேண்டும்.    அப்பகுதி முட்கள் அடர்ந்த பகுதி என்பதால், மாணவிகள் தனியாக நடந்து செல்வது பாதுகாப்பு கிடையாது.  அங்கு பஸ் போக்குவரத்தும் கிடையாது.    எனவே மாணவிகளின் நலன் கருதி, பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலேயே தேர்வு மையம் ஏற்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.