விருதுநகர்

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அருப்புக்கோட்டை நகராட்சியில் நகர்ப்புற சமுதாய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

   வெள்ளைக்கோட்டை செங்குந்தர் நடுநிலைப் பள்ளி, சொக்கலிங்கபுரம் தேவாங்கர் நடுநிலைப் பள்ளி, செங்கமுத்து பூங்கா, தெற்குதெரு சுகாதாரப் பிரிவு அலுவலகம், எம்.எஸ்.ஆர். பள்ளி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் இக்கசாயம் வழங்கப்பட்டது.

   நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் நிலவேம்பு கஷாயத்தை பொதுமக்களுக்கு வழங்கி,  தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் தமிழ்காந்தன், முன்னாள் துணைத் தலைவர் பழனிச்சாமி, கவுன்சிலர் மணி, சித்த மருத்துவர் திலகம், நகர்நல அலுவலர் ராஜபாண்டி, சமுதாய அமைப்பாளர் நாகேஷ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், சரத்பாபு, இளங்கோ, தவிட்டுராஜன், செல்லபாண்டியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT