வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் முற்றுகை
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, ஆதித்தனேந்தல், என்.பள்ளபட்டி, சேதுராயனேந்தல், நெடுகனேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி, ஆதித்தனேந்தல், என்.பள்ளபட்டி, சேதுராயனேந்தல், நெடுகனேந்தல் உள்ளிட்ட கிராம விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.
300 ஏக்கரில் விவசாயம் செய்ததில், 50 ஏக்கருக்கும் குறைவாகவே வறட்சி நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோரின் பெயர்கள், பட்டியலில் இல்லை.
இதனால் கிராம விவசாயிகள், நரிக்குடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். காவல் ஆய்வாளர் குருவெங்கட்ராஜூவிடம் புகார் தெரிவித்தனர்.
Advertisement
திருச்சுழி வட்டாட்சியர் புருஷோத்தமன் பேச்சுவார்த்தை நடத்தி, அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.