: விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் பேரூராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளை பேரூராட்சி துணை தலைவர் மணிராஜ் துவக்கி வைத்துப் பேசினார். மதுரை சோபனா கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விருத்தாச்சலம் திருநங்கை, தஞ்சை மணி கலைக் குழுவினர் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த ஓரங்க நாடகம் நடைபெற்றது. சுகாதார மேற்பார்வையாளர் ராம்குமார், பேரூராட்சி அலுவலர்கள் தங்கமணி, மணி, வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.