முகப்பு
விருதுநகர்

வறட்சி நிவாரணம் வழங்கல்

காரியாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், 3 ஆயிரத்து 564 பயனாளிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

Updated On : 10 ஜூன், 2013 at 12:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:37 PM

காரியாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம், 3 ஆயிரத்து 564 பயனாளிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

   கூட்டுறவு கடன் வங்கித் தலைவர் விஜயன் தலைமை வகித்தார். துணை தலைவர் ராஜாங்கம், வீட்டு வசதி வாரிய துணை தலைவர் விஜயராஜன், கூட்டுறவு பால் பண்ணை தலைவர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தார்.

   வறட்சி நிவாரணத் தொகையை பயனாளிகளுக்கு வழங்கி, நிர்வாகக் குழு உறுப்பினர் பழனி பேசியதாவது: காரியாபட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் வங்கி மூலம், ஒரு கோடியை 49 லட்சத்து 3 ஆயிரத்து 640 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

   நிகழ்ச்சியில் சார் பதிவாளர் ரவீந்திரன், செயலர் ரஜினிகாந்த் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.