முகப்பு
விருதுநகர்

ஆசிரியர்களுக்கு கணிதப் பயிற்சி

அருப்புக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி உயர்தொடக்க நிலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.

Updated On : 4 மார்ச், 2013 at 12:25 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:10 PM

அருப்புக்கோட்டை அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வளமையம் சார்பில் கணிதம் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் பயிற்சி உயர்தொடக்க நிலையில் கணிதம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டது.

   ஆசிரியர் பயிற்றுனர்கள் இப்பயிற்சியினை அளித்தனர். இப்பயிற்சியில் வடிவியல் மற்றும் அளவியல் செயல்பாடுகள், கணிதத்தில் சுருக்கு வழிமுறைகளும், காரணங்களும், மதிப்பீட்டு திறன்களில் புதிய பரிமாணங்கள், இயற்கணிதம் ஆகியவை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

   இப்பயிற்சி கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சுடலைமணி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் நடந்தது. உதவி தொடக்க கல்வி அலுவலர் நாகராஜன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பற்குணம் ஆகியோர் பயிற்சியினை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினர். ஆசிரியர் பயிற்றுனர்கள், சுப்பையா, அமிர்தவள்ளி, ஜோதிலட்சுமி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.