விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் அருகே நந்திக்குண்டு கிராமத்தில் அம்மா திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாமில் 240 மனுக்கள் வரப்பெற்றதாகவும், அதில் 85 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உரிய ஆவணங்கள் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள மனுக்களுக்கு 10 நாள்களில் தீர்வு காணப்படும் என காரியாபட்டி ஒன்றியக்குழு துணை தலைவர் ராமமூர்த்தி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.