விருதுநகர்

திருச்சுழி பகுதியில் மர்மக் காய்ச்சல்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழியில் மர்மக் காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

   திருச்சுழி கிழக்குத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி கிடையாது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கி சுற்றுசூழல் பாதித்துள்ளது.

    கடந்த சில நாள்களில் இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதுகுறித்து கிழக்குத் தெருவைச் சேர்ந்த ராதா கூறுகையில்: கழிவுநீர் தேங்கி நிற்பதால் தான் காய்ச்சல் பரவியுள்ளது.

   ஊராட்சி நிர்வாகம் எங்கள் பகுதியில் கால்வாய் அமைத்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT