முகப்பு
விருதுநகர்

திருச்சுழி, நரிக்குடியில் உழவர் பெருவிழா

திருச்சுழி, எம்.ரெட்டியாபட்டி, குல்லம்பட்டி, சித்தலைக்குண்டு கிராமங்களில், உழவர் பெருவிழா நடைபெற்றது.

Updated On : 21 மே, 2013 at 12:28 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:20 PM

திருச்சுழி, எம்.ரெட்டியாபட்டி, குல்லம்பட்டி, சித்தலைக்குண்டு கிராமங்களில், உழவர் பெருவிழா நடைபெற்றது.

   விழாவில் ஊராட்சித் தலைவர்கள் உத்திரம், ராஜூ தலைமை வகித்தனர். ரெட்டியபட்டி வேளாண் உதவி இயக்குனர் நாச்சியாரம்மாள், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி, தொழில்நுட்ப மேலாளர் பிரேமா முன்னிலை வகித்தனர்.

   வேளாண் உற்பத்தி பொருள்களை அதிகரிக்கவும், புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் அரசின் திட்ட பணிகள் குறித்து விளக்கப்பட்டன. தொழில்நுட்ப கருத்து காட்சி நடந்தது.

Advertisement

   பார்த்தீனியம் செடிகளால் உண்டாகும் நோய்கள், எலி ஒழிப்பு, மண் மாதிரி சேகரம், விதை நேர்த்தி, மண்புழு உரம் தயாரித்தல், செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டன.

   விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த கையேடு, இடுபொருள்கள் விநியோகம் செய்யப்பட்டன. கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வேளாண் அலுவலர் சந்திரசேகரன், உதவி வேளாண் அலுவலர் மோகன்காந்தி, பொறியியல் துறை கோபிநாத் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.