முகப்பு
விருதுநகர்

பள்ளிமடத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம், பள்ளிமடத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். உபதலைவர் அல்லாபக்ஸ்

Updated On : 13 அக்டோபர், 2013 at 12:24 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:44 PM

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்தியலிங்க நாடார் மேல்நிலைபள்ளி என்.எஸ்.எஸ். திட்ட சிறப்பு முகாம், பள்ளிமடத்தில் நடந்தது. ஊராட்சி தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். உபதலைவர் அல்லாபக்ஸ் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை மஞ்சுளாதேவி வரவேற்றார். பள்ளி வளாகம், ஊராட்சி வளாகம், காளையார்கோவில், ரமண மகரிஷி சுற்றுப்புற பகுதிகளில் சாலையோர முட்புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. யோகா, தியானம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலிதீன் ஒழிப்பு, தீயணைப்பு தடுப்புமுறை விளக்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் கோட்டமுத்து ஆசிரியர் மலைச்சாமி, தீயணைப்பு துறை அலுவலர் மாரிமுத்து, என்.எஸ்.எஸ், திட்ட அலுவலர் மூர்த்தி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் கனகராஜ், ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.