முகப்பு
விருதுநகர்

காரியாபட்டியில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம், எஸ்.பி.எம்., டிரஸ்ட், சார்பாக மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 அக்டோபர், 2013 at 12:23 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:57 PM

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வலியுறுத்தி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம், எஸ்.பி.எம்., டிரஸ்ட், சார்பாக மனு அளிக்கப்பட்டது.

 காரியாபட்டி அரசு மருத்துவமனையில் குடும்ப நலம், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை வசதிகள் இருப்பதால், தினமும் 600 முதல் 800 பேர் வரை வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர், சிகிச்சை பெற்றபின் பஸ்சுக்காக ரோட்டோரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கின்றனர். நோயாளிகள் ஒதுங்க இடமில்லாமல் தரையில் உட்கார வேண்டிய அவலநிலை உள்ளதால், பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். மேலும், மருத்துவமனையில் இருந்து பஸ் ஸ்டாண்ட்டுக்கு ஒன்றரை கி.மீ., தூரம் நடந்து செல்லவேண்டும். இதனாலும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். இவர்களது நலன் கருதி அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என, எஸ்.பி.எம். டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி, விருதுநகர் ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.