மறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை! இபிஎஸ் விளக்கம்
அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை திமுக அவமதித்து வருவதாக இபிஎஸ் விமர்சனம்...
Updated On : 13 ஏப்ரல், 2026 at 6:14 PM
மறைந்த தலைவர்களை தான் அவமதிக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 13) தெரிவித்தார்.
மறைந்த தலைவர்கள் குறித்து அவதூறு பேசி, அவமதித்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுகதான் என்றும், காமராஜரை அவமதித்த திருச்சி சிவாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டித்தாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
Advertisement
summary