விருதுநகர்

கிறிஸ்தவ சபை பிரதிஷ்டை விழா

திருச்சுழி அருகேயுள்ள கல்லூரணி அற்புத ஏ.ஜி. சபையின் 12-வது ஆண்டு பிரதிஷ்டை விழா பாஸ்டர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாடல் ஆராதனையை பாஸ்டர் ஜூவானந்தம்,

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி அருகேயுள்ள கல்லூரணி அற்புத ஏ.ஜி. சபையின் 12-வது ஆண்டு பிரதிஷ்டை விழா பாஸ்டர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் தலைமையில் நடைபெற்றது. பாடல் ஆராதனையை பாஸ்டர் ஜூவானந்தம், டென்னிஸ் பாக்கியராஜ் ஆகியோர் நடத்தினர். தமிழ்நாடு மற்றும் தென்இந்தியா ஏ.ஜி. சபைகளின் தலைவர் ஸ்டீவ் தேவசெய்தி வழங்கினார்.

     செங்கோட்டை பட்டி ராமராஜ் எழுதிய புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் சபையில் வாலிபர் ஊழியத்திற்காக பிரசன்னா, ஜெயபாண்டி, ஜெபஸ்டியான், சாம்சன்பால், பெண்கள் ஊழியத்திற்காக பிளெஸ்ஸி, ராஜகுமாரி, பாண்டிசெல்வி, லீலாவதி, புருஷர்கள் ஊழியத்திற்காக ரவி, காலேப், வில்லியம்ஸ், சாமுவேல் ஆகியோரை ஏ.ஜி. ஸ்தாபன உபதலைவர் ஸ்டீவ் ஜெயராஜ் பிரதிஷ்டை செய்தார்.

      சபைதலைவி பெல்சியா, பாஸ்டர் சார்லஸ் பரிசு வழங்கினர்.  போதகர்கள் எபிநேசர் அய்யாத்துரை, ஜான்சுந்தர், தேவமணி, ஜேக்கப் முத்துக்குமார், சற்குணம், பவுல்ராஜன் ஆகியோர் ஜெபித்தனர். முடிவில் சபை போதகர் ஜேக்கப் ஜெம்புலிங்கம் நன்றி கூறினார். டேவிட்ராஜன், அழகர்சாமி, பாண்டியராஜ் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT