விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு சென்னகேசவப் பெருமாள் சமேத செங்கமல நாச்சியார் திருக்கோயில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
இக் கோயிலில் புரட்டாசி மாதத் திருவிழா துவங்கியது. திருவிழாவையொட்டி முனியாண்டி வகையறா மக்களுக்கு பாத்தியப்பட்ட மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.
இரவு சுமார் 8 மணியளவில் தங்கத் தேரோட்டம் சிறப்பு நிகழ்ச்சி துவங்கியது. பக்தர்கள் தேரை இழுத்து வந்தனர்.
தங்கத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் சென்னகேசவப் பெருமாள், செங்கமலநாச்சியரம்மாள் வலம் வந்தனர். திருக்கோயிலைச் சுற்றி வந்த தங்கத்தேர் பவனி நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.