விருதுநகர்

திருச்சுழியில் அதிமுக பொதுக்கூட்டம்

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழ்ப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் இந்திரா மோகன், ஒன்றிய

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி ஒன்றிய அதிமுக சார்பில் தமிழ்ப்பாடியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் பஞ்சவர்ணம் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் இந்திரா மோகன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கர் என்ற ரகுக்குமார், மாவட்ட கவுன்சிலர் மகாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி இணைச் செயலாளர் பழனி வரவேற்றுப் பேசினார். தலைமைக் கழக பேச்சாளர் கோபி சிறப்புரையாற்றினார். கைத்தறித் துறை அமைச்சர் சுந்தர்ராஜ் பேசும் போது, தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக கிராம மக்களின் முன்னேற்றத்துக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தொடர்ந்து கல்வி பயில அனைத்து உதவிகளையும் முதல்-அமைச்சர் செய்து தருகிறார். கல்வித்துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் முதல் - அமைச்சர் அறிவிக்கும் வேட்பாளர்கள் வெற்றிக்கு நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.   மாவட்ட பொருளாளர் குருசாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலாளர் முனியாண்டி, கூட்டுறவு சங்கத் தலைவர் ராமலிங்கம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

     கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT