முகப்பு
விருதுநகர்

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி 12ஆவது வார்டு பகுதியில் நவீன சுகாதார வளாகம், குளியலறை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 31 ஆகஸ்ட், 2014 at 12:21 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:08 PM

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சி 12ஆவது வார்டு பகுதியில் நவீன சுகாதார வளாகம், குளியலறை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் பரமசிவம் தலைமை தாங்கினார். நகரச் செயலர் ராசா, ஒன்றியச் செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் சேகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.