விருதுநகர்

விலையில்லா பொருள்கள் வழங்கல்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வில்லிபத்திரியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வில்லிபத்திரியில் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 விழாவுக்கு அருப்புக்கோட்டை வட்டாட்சியர் முகம்மது ரபிக்கான், ஒன்றியக்குழு தலைவர் யோகவாசுதேவன், துணைத் தலைவர் கொப்பையாராஜ், ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், மகேஸ்வரி மாவட்ட கவுன்சிலர் காளியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   

    அண்ணா தொழிற்சங்கத் தலைவர் கதிரேசன், ராமநாதன், கூட்டுறவு வங்கித் தலைவர் கருப்பையா, ஊராட்சி செயலாளர் குருவு உள்ளிட்டோர் அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றுப் பேசினர். அருப்புக்கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வைகைச்செல்வன் வில்லிபத்திரியில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் 585 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களை வைகைச்செல்வன் வழங்கி பேசினார். வில்லிபத்திரி கிளைச் செயலாளர் பசும்பொன் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT