வலுக்கலொட்டியில் பொங்கல் பரிசு வழங்கல்
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அருகேயுள்ள வலுக்கலொட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூட்டுறவு வங்கித் தலைவர் மகாலிங்கம், ஊராட்சித் தலைவர் ஜோதிபாசு, துணைத் தலைவர் நாகம்பட்டி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தனர். கிளைக் கழக செயலாளர் ரவீந்திரன், பஞ்சவர்ணம், கணக்கு வேட்டையன், ஊராட்சி செயலாளர் சங்கரசபாபதி முன்னிலை வகித்தனர்.
காரியாபட்டி ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி, விவசாயப் பிரிவு செயலாளர் முத்துப்பாண்டி ஆகியோர் 640 பயனாளிகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுகளை வழங்கிப் பேசினர்.
Advertisement