தலைமை ஆசிரியர்களுக்கு மீளாய்வுக் கூட்டம்
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்பட்ட அடைவு தேர்வு முடிவுகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன்
நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடந்த கல்வியாண்டில் பள்ளிகளில் நடத்தப்பட்ட அடைவு தேர்வு முடிவுகளின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அனைவருக்கும் கல்வி இயக்கம் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் தலைமை வகித்தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராணி, கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.