முகப்பு
விருதுநகர்

காரியாபட்டியில்மது அருந்திய துப்புரவு பணியாளர்கள் இருவர் சாவு

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திங்கள்கிழமை காலை மது அருந்திய துப்புரவு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

Updated On : 24 ஜூன், 2014 at 12:07 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:11 AM

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் திங்கள்கிழமை காலை மது அருந்திய துப்புரவு பணியாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.

காரியாபட்டி பேரூராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளராக இருந்தவர் மலைச்சாமி(27). தாற்காலிக பணியாளராக பணிபுரிந்தவர் குருசாமி(38). இருவரும் திங்கள்கிழமை காலை காரியாபட்டி காவலர் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டை சுத்தம் செய்துவிட்டு அதற்கான கூலியையும், ஒரு மது பாட்டிலையும் வாங்கினராம். அந்த மதுவைக் குடித்த சில நிமிஷங்களில் இருவரும் சுருண்டு விழுந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த பணியாளர்களின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காரியாபட்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மது பாட்டிலை கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், டி.எஸ்.பி., பாலசுப்பிரமணி ஆகியோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து காரியாபட்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.