விருதுநகர்

நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள திமுக. முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் உள்ள திமுக. முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன் நினைவு மண்டபத்தை சேதப்படுத்திய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திமுக.வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியன். திருச்சுழி எம்.எல்.ஏ, தங்கம் தென்னரசுவின் தந்தையான இவரது நினைவு மண்டபம் காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் உள்ளது. இங்கு புதன்கிழமை மாலை வந்த 3 பேர் புகைப்படம் எடுக்கப் போவதாகக் கூறி நினைவு மண்டபத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை பார்த்து சந்தேகமடைந்த காவலாளி சங்கிலி, அனுமதிக்க முடியாது எனக்கூறி தடுத்தார். காவலாளியுடன் தகராறு செய்த அவர்கள், அவரை கீழே தள்ளி விட்டு மண்டபத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்த தங்கபாண்டியனின் புகைப்படத்தின் மீது கற்களை வீசி தாக்கி உடைத்தனர். மேலும், சமாதியையும் சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டனர். காவலாளி கொடுத்த புகாரின் பேரில் மல்லாங்கிணறு போலீஸார் காரியாபட்டி அருகேயுள்ள முடியனூரைச் சேர்ந்த ரகுநாதன், குமார், அலங்காநல்லூரைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT