விருதுநகர்

பயணியர் நிழற்குடை திறப்பு விழா

மல்லாங்கிணர் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

கல்யாணி வெங்கடராமன்

மல்லாங்கிணர் பகுதியில் புதிய பயணியர் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது.

திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் மல்லாங்கிணர் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை திறப்புவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 திறப்பு விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் நாகையா, செயல் அலுவலர் ஜவஹர், முன்னாள் துணைத் தலைவர் போஸ், தி.மு.க. நகரச் செயலர்கள் செந்தில், முருகேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

 ஒன்றியச் செயலர்கள் போஸ், சண்முகச்சாமி, பொன்னுதம்பி, பொதுக்குழு உறுப்பினர் தேவர் முன்னிலை வகித்தனர்.

திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு புதிய நிழற்குடை மற்றும் கல்வெட்டினை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சம்பத், வையம்பட்டி வேல்சாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் கண்ணன், சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT