முகப்பு
விருதுநகர்

குடிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் ஆணையாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் காரியாபட்டி ஜெயச்சந்திரசேகரன், மல்லாங்கிணறு ஜவகர் முன்னிலை வகித்தனர்.

Updated On : 6 மார்ச், 2014 at 12:19 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 10:04 AM

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குடிநீர் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் ஆணையாளர் மகாலட்சுமி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரேசன், பேரூராட்சி செயல் அலுவலர்கள் காரியாபட்டி ஜெயச்சந்திரசேகரன், மல்லாங்கிணறு ஜவகர் முன்னிலை வகித்தனர்.

 யூனியன் துணைத் தலைவர் ராமமூர்த்தி பேரணியை துவக்கி வைத்தார். காரியாபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

 காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது. குடிநீர் வடிகால் வாரியப் பொறியாளர்கள், அலுவலர்கள் குடிநீரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதில் ஒன்றியக் கவுன்சிலர்கள், பேரூராட்சிக் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.