விருதுநகர்

திருச்சுழி பகுதியில் விவசாயிகளுக்கான ஆய்வு முகாம்

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் நடைபெற்ற ஆய்வு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர். திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் மண்ணாய்வு கட

கல்யாணி வெங்கடராமன்

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் நடைபெற்ற ஆய்வு முகாமில் விவசாயிகள் பங்கேற்றனர்.

திருச்சுழி பகுதியில் நடமாடும் மண்பரிசோதனை நிலையம் மூலம் மண்ணாய்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. மண்டபசாலை, எம்.ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் நேரடி மண்ணாய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் தங்களது நிலத்தின் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வு செய்வதற்கு மண் மாதிரிகளுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மண் ஆய்வின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடம் எம்.ரெட்டியபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் விரிவாக விளக்கினார். மண் பரிசோதனை செய்வதன் மூலம் தங்களது நிலத்தின் தன்மை மற்றும் சத்துக்கள் பற்றியும், மண்ணில் உள்ள பிரச்னைகள் குறித்தும், வயலில் இடவேண்டிய பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறித்தும், நில சீர்திருத்தங்கள் குறித்தும், நிலத்திற்கேற்ற பயிர் சாகுபடி குறித்தும் தெரிந்து கொள்ளலாம். வேளாண்மை மாதிரிகளும் தோட்டக்கலைத்துறை மூலம் 135 மண் மாதிரிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு மண் வள அட்டை மூலம் விவசாயிகளுக்கு ஆய்வு முடிவுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT