விருதுநகர்

காரியாபட்டி அருகே லாரி கடத்தல்

காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி அருகே கத்தியை காட்டி மிரட்டி லாரியை கடத்திச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

   இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தருமபுரியைச் சேர்ந்தவர் விமலன் (35). லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரான இவர் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு லாரியில் சரக்குகளை ஏற்றிகொண்டு சென்றார். காரியாபட்டி அருகே கள்ளிக்குடி விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் விமலனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1400-ஐ பறித்துக்கொண்டதோடு லாரியையும் கடத்திச் சென்றனர்.

   இதுகுறித்து விமலன் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கலைசெல்வன் மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் எம். இலுப்பைகுளத்தைச் சேர்ந்த கணேசன் (40), மற்றும் ராமகிருஷ்ணன் (52) ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது லாரியை கடத்தியது அவர்கள் தான் என்பது தெரியவந்தது.

  இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். லாரியுடன் தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மிதமான மழை

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

SCROLL FOR NEXT