தகுதியுள்ள முதியோருக்கு உதவிதொகை வழங்கக் கோரிக்கை
கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவிதொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவிதொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாவட்டச் செயலர் கிருஷ்ணன் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தமிழகத்தில் முதியோர் உதவித் தொகையாக மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. வசதி படைத்த சிலரும் முதியோர் உதவி தொகை பெற்று வந்தனர். இந்த நிலையில் தகுதியான நபர்களுக்குதான், வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. ஆனால் தகுதியான நபர்களைக் கூட பட்டியலில் இருந்து நீக்க அந்தக்குழு பரிந்துரைத்ததாக தெரிகிறது. இதனால் பல பயனாளிககளுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
உணவுக்கே கஷ்டப்படும் தகுதியான பல முதியவர்கள் உதவித்தொகை கிடைக்காமல் தவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மறு ஆய்வு செய்து தகுதியான அனைவருக்கும் மீண்டும் முதியோர் உதவிதொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement