விருதுநகர்

புதுமணத் தம்பதிகளுக்கு விழிப்புணர்வு முகாம்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள அச்சங்குளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமணத் தம்பதிகளுக்கான விழிப்புணர்வு முகாம்

கல்யாணி வெங்கடராமன்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு அருகேயுள்ள அச்சங்குளம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் புதுமணத் தம்பதிகளுக்கான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

      முகாமிற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர்கள் கலைச்செல்வி, லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட புதுமணத் தம்பதிகள் முகாமில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

         குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என லெட்சுமி விளக்கிப் பேசினார். புதுமணத் தம்பதிகளுக்கு விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற புதுமணத் தம்பதிகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரன் பரிசு வழங்கினார். முகாமுக்கான ஏற்பாடுகளை காரியாபட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட முகாம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT