விருதுநகர்

விருதுநகரில் இளைஞரை தாக்கியதாக 2 பேர் கைது

விருதுநகர் அருகே இளைஞரை தாக்கியதாக 2 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே இளைஞரை தாக்கியதாக 2 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மதன்ராஜ்(24). இவரது தங்கை மோனியா, தான் விரும்பியவருடன் வீட்டை விட்டு சென்றாராம். இதற்கு காரணமாக விருதுநகரைச் சேர்ந்த ஜேசுராஜ்(26), கட்டையாபுரம் தேவசகாயம் ஆகியோர் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக மதன்ராஜ் இருவரிடமும் கேட்டாராம். அதற்கு இருவரும் சேர்ந்து மதன்ராஜை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம். இது குறித்து மதன்ராஜ் பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்பைடையில் போலீஸார் வழக்கு பதிந்து ஜேசுராஜ், தேவசகாயம் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT