விருதுநகர் அருகே இளைஞரை தாக்கியதாக 2 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே பாத்திமா நகரைச் சேர்ந்தவர் மதன்ராஜ்(24). இவரது தங்கை மோனியா, தான் விரும்பியவருடன் வீட்டை விட்டு சென்றாராம். இதற்கு காரணமாக விருதுநகரைச் சேர்ந்த ஜேசுராஜ்(26), கட்டையாபுரம் தேவசகாயம் ஆகியோர் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக மதன்ராஜ் இருவரிடமும் கேட்டாராம். அதற்கு இருவரும் சேர்ந்து மதன்ராஜை தாக்கியதோடு, கொலை மிரட்டலும் விடுத்தாராம். இது குறித்து மதன்ராஜ் பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் அடிப்பைடையில் போலீஸார் வழக்கு பதிந்து ஜேசுராஜ், தேவசகாயம் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.