மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் சண்முகத்தாய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலர் முத்துபாண்டி, நகர செயலாளர் துளசிதாஸ், கூட்டுறவு வங்கி தலைவர் பால்ச்சாமி, பேரூராட்சி துணைத் தலைவர் மணிராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி, துணைத் தலைவர் ராமமூர்த்தி ஆகியோர் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினர். இதில், நகர பொருளாளர் பாண்டி, தொழிற்சங்க தலைவர் பழனிச்சாமி, கிளை செயலாளர் ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.