விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மறையூரில் உள்ள அழகிய மீனாள் அம்மன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நதிக்குடி அருகே உள்ள மறையூர் கிராமத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஸ்ரீஅழகிய மீனாள் அம்மன் கோயில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, விக்னேஷ்வரபூஜை, கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தன்று புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோவை காமாட்சிபுரம் அங்காள பரமேஸ்வரி சித்தாபீடம் ஆதினம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் ஆன்மிக உரையாற்றினார். விழாவில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.