முகப்பு
விருதுநகர்

அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

காரியாபட்டி அருகே தோணுகால் ஒன்றிய அதிமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஜூலை, 2015 at 12:29 AM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:31 AM

காரியாபட்டி அருகே தோணுகால் ஒன்றிய அதிமுக சார்பில் அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிளைச்செயலர் பொன்னையா, மாவட்ட இலக்கிய அணி செயலர் முருகன் தலைமை வகித்தனர். விவசாய பிரிவு செயலர் முத்துபாண்டி, கூட்டுறவு வங்கி தலைவர்கள் பால்ச்சாமி, முருகன், நகர செயலர்கள் துளசிதாஸ், விஜயன் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திகாதேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

காரியாபட்டி ஒன்றியச் செயலர் ராமமூர்த்தி, தலைமைப் பேச்சாளர் முகம்மது ஆகியோர் அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கிப் பேசினர். ஒன்றியக்குழு உறுப்பினர் இந்திரா, ஊராட்சி செயலர் சங்கரசபாபதி, கிளைச் செயலர்கள் ராமநாதன், கருப்புராஜா, கணபதி, மல்லாங்கிணறு நகர அதிமுக பொருளாளர் பாண்டி, மாவட்ட அமைப்பு சாரா அணி தலைவர் வெயில்கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.