விருதுநகர்

ராம்கோ நூற்பாலை பிரிவுக்கு தொழில் நல்லுறவு விருது

DIN

ராஜபாளையம் ராம்கோ நூற்பாலை பிரிவு தொழிற்சாலைக்கு, மாநில அரசின் தொழில் நல்லுறவு விருது வழங்கப்பட்டுள்ளது.
   தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களிடம் நல்லுறவுடன் விளங்கும் தொழிற்சாலைக்கு விருது வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 6 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக இந்த ஆண்டில் விருது வழங்கப்பட்டது.
   ராம்கோ நூற்பாலை பிரிவைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு சங்கர் ஆலைக்கு, சென்னையில் அண்மையில் நடந்த விழாவில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் இவ்விருதினை வழங்கினார். இதில், 2008, 2011, 2012 ஆம் ஆண்டுக்கான முதல் பரிசையும், 2010, 2013, 2014 ஆண்டுகளுக்கு இரண்டாம் பரிசையும் என 6 ஆண்டுகளுக்கான பரிசுகள் இந் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டன.
   இத்துடன், ஆலைத் தொழிலாளர் சங்கத்துக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. ஆலையின் துணை மேலாளர் ராம்குமார் மற்றும் சீத்தாராமன் தொழிற்சாலை நிர்வாகத்துக்கான விருதுகளை பெற்றனர். முத்தையா, கிருஷ்ணசாமி, செல்வராஜ் ஆகியோர் தொழிற் சங்கத்துக்கான விருதுகளைப் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT