விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

DIN

விருதுநகர் மாவட்டம்,     ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-நெடுங்குளத்தைச் சேர்ந்தவர் பாலு. இவரது மகன் விஜயகுமார் (21). இவர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் மெக்கானிக்கல் இந்த ஆண்டு முடித்துள்ளார். இதே இடத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் அபிராமி சுந்தரி (21). இவர், விஜயகுமார் படித்த கல்லூரி வளாகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
  இருவரும் ஒருவரையொருவர் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த அபிராமி சுந்தரியின் குடும்பத்தார் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால், மனம் உடைந்த இருவரும் விஜயகுமாரின் வீட்டில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.    கூமாப்பட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி, வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார்  விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT