முகப்பு
விருதுநகர்

திருத்தங்கலில் அரசு பெண்கள் பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இடியும் நிலையில் உள்ள சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    திருத்தங்கலில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1100 மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதாகியுள்ளது.
தற்போது மழை பெய்து வருவதால் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த சுவரை சீரமைக்க வேண்டும் என
அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
ஆனால் சுவரை சீரமைக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பள்ளி மாணவிகளின் நலன் கருதி இந்த சுற்றுச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →