முகப்பு
விருதுநகர்

திருச்சுழி-தமிழ்ப்பாடி சாலையில் திடீர் பள்ளங்கள்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

விருதுநகர் -பார்த்திபனூர் சாலையில், திருச்சுழியிலிருந்து தமிழ்ப்பாடி கிராமம் இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குகின்றனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

விருதுநகர் -பார்த்திபனூர் சாலையில், திருச்சுழியிலிருந்து தமிழ்ப்பாடி கிராமம் இடையிலான பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்குகின்றனர்.
       விருதுநகர்-பார்த்திபனூர் மாநில நெடுஞ்சாலையானது, விருதுநகரிலிருந்து தொடங்கி அருப்புக்கோட்டை , திருச்சுழி, நரிக்குடி வழியாக பார்த்திபனூரில் இணைகிறது. இந்த நெடுஞ்சாலையில், தமிழ்ப்பாடி கிராமத்துக்கும், திருச்சுழிக்கும் இடை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு உள்ளது.  இச்சாலையில் தற்போது ஆங்காங்கே கற்கள் பெயர்ந்து சுமார் 1 அடி ஆழமும், 2 அடி நீளத்துக்கும் பல்ளங்கள் உருவாகியுள்ளன.     இதனால், இப்பகுதியில் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
    எனவே, இச்சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →