விருதுநகர்

ராஜபாளையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது: 2 டிராக்டர்கள் பறிமுதல்

DIN

ராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியில் மணல் கடத்திய இருவரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
      கீழராஜகுலராமன் போலீஸார் நல்லமநாயக்கன்பட்டி சாலையில் ரோந்து சென்றனர். அப்போது, மணல் கடத்தி வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு வருவது தெரியவந்தது. அதையடுத்து, டிராக்டரை ஒட்டி வந்த நல்லமங்கலத்தைச் சேர்ந்த மாரிராஜ்(37) மற்றும் கன்னிதேவன்பட்டியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (50) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT