விருதுநகர்

சிவகாசி கல்லூரியில் மினி மாரத்தான் போட்டி

DIN

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித் துறை சார்பில், வளமான இந்தியாவுக்கு நலமான இளைஞர்கள் என்னும் கருத்தை வலியுறுத்தி, மினிமாரத்தான் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில்தொடங்கிய இப் போட்டியை, கல்லூரி முதல்வர் வ. பாண்டியராஜன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். மாரத்தான் போட்டியில், மாணவர்களுக்கு 12.5 கி.மீ. தொலைவும், மாணவிகளுக்கு 5 கி.மீ.தொலைவும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், 700 மாணவர்களும், 600 மாணவிகளும் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில், மாணவர் பிரிவில் பி. கஜேந்திரகோகுல் முதலிடமும், எஸ். குணாளன் இரண்டாமிடமும், ஜி. முருகானந்தம் மூன்றாமிடமும் பெற்றனர்.
மாணவிகள் பிரிவில் பி. மூ னீஸ்வரி முதலிடமும், வீ. கல்பனாதேவி இரண்டாமிடமும், என்.மகேஸ்வரி மூன்றாமிடம் பெற்றனர்.போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கல்லூரி
விளையாட்டு விழாவில் பரிசு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டினை, உடற்கல்வி இயக்குனர் பால்ஜீவசிங், துறைத் தலைவர் ஜான்சன், உடற்கல்வி உதவி இயக்குநர் கவிதா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT