விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை அமைக்க பூமி பூஜை

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ரூ.36 லட்சம் செலவில் சேதமுற்ற சாலையை மேம்படுத்தி புதிய சாலை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
  ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள இடையபொட்டல் தெருவில் இருந்து மம்சாபுரம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் ஆகியோர் சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா முத்தையாவிடம் சாலையின் நிலை குறித்து கூறி சீரமைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து எம்எல்ஏ முயற்சியின் பேரில் சாலைகளை சீரமைக்க அரசு ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்கு செவ்வாய்க்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
இதில் சந்திரபிரபா முத்தையா பங்கேற்று பணிகளைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) பாபு, பொறியாளர் ராமலிங்கம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் த.முத்தையா, கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT