விருதுநகர்

கலங்காபேரி சாலையை சீரமைக்கக் கோரிக்கை

DIN

ராஜபாளையம் அருகே உள்ள கலாங்காபேரி சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ராஜபாளையம் பிஎஸ்கே நகரிலிருந்து 6 கி.மீ தொலைவில் மொட்டமலை உள்ளது. சஞ்சீவ் மலையில் இருந்து இந்த ஊருக்கு சாலை செல்கிறது. ஊராட்சி மற்றும் நகராட்சி சார்பில் இந்த சாலை பராமரிக்கப்படுகிறது. நகராட்சிப் பகுதியான ஆர்.ஆர்.நகர் வடக்கு பகுதி முடிவடைந்ததும், ஸ்ரீவில்லிபுத்துர் யூனியனைச் சேர்ந்த கலங்காபேரி ஊராட்சி வருகிறது. 
   6 கி.மீ சாலையை மொத்தம் 3 ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஊராட்சி சாலையை சீரமைக்கும்போது, மற்ற ஊராட்சிகள் சீரமைப்பதில்லை. இதனால் 6 கி.மீ., தூர சாலையில் சில இடங்களில் செப்பனிடும்போது, மற்ற பகுதிகள் சேதமடைந்து காணப்படும். 
   ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட 3 ஊராட்சி நிர்வாகமும் சாலையை சீரமைக்கவில்லை. இதனால், சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. தார்ச்சாலை மண் சாலையாக மாறியுள்ளது.
  பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, 6 கி.மீ., தூரத்துக்கும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT