விருதுநகர்

ராஜபாளையம்-தென்காசி-கொல்லம்  அகல பாதையில் ரயில் விட கோரிக்கை

DIN

விருதுநகர்- ராஜபாளையம்-தென்காசி-கொல்லம்  அகல ரயில் பாதைப் பணிகள்முழுவதும் முடிந்துள்ள நிலையில், இந்த வழித்தடத்தில்  கொல்லத்துக்கு விரைவில் ரயிலை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     விருதுநகரிலிருந்து கொல்லம் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதை முழுவதும்,  அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் கடைசியாக பணிகள் நடந்த நியூஆரியங்காவு-இடமண் இடையேயான ரயில் வழித்தடத்தில் சோதனை ஓட்டமும் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்காதது, பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
    இந்த வழித்தடத்தில், முன்பு இயக்கப்பட்ட சென்னை மெயில், நாகூர் மற்றும் கோவைக்கு ரயில்ளை இயக்கவும், இடமண் வரை இயங்கும் பாலக்காடு குருவாயூர் ரயில்களை, ராஜபாளையம் வழியாக மதுரைக்கு நீட்டிக்கவும் , கொல்லம்-மானாமதுரை வழியாக சென்னை, ராமேசுவரத்துக்கும் ரயில் இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT