முகப்பு
விருதுநகர்

எஸ்.டி.பி.ஐ கட்சி புதிய நிர்வாகிகள் தேர்வு

விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ

Updated On : 15 மே, 2018 at 12:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

விருதுநகர் மாவட்ட எஸ்.டி.பி. ஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த தேர்தலுக்கு அதிகாரியாக இக் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அ .முஜிபுர் ரஹ்மான் மற்றும் நெல்லை மேற்கு மாவட்ட துணைத் தலைவர் மகபூப் அன்சாரி பைஜி ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலை நடத்தினர்.
இதில்,மாவட்ட தலைவராக முகமது ஷாஜஹான், மாவட்ட பொதுச் செயலாளராகசேக் முகமது,மாவட்ட பொருளாளராக, முகமது தாஹா தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக முகமது ரபிக், காதர் ஒலி,அப்சர் அலி,அகமது காசிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் 3 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.