சதுரகிரி மலையில் உழவாரப் பணி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் பாராமவுண்ட் மகேந்திரன் தலைமையில் அங்கு சென்ற தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சிவபக்தர்கள் கோயில் பிரகாரங்களை சுத்தம் செய்தனர். பின்னர் கோயிலின் வனப் பகுதியில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதன் பின் அங்கு உலக உயிர்பன்மை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பக்திப் பேரவையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ந.மாரிச்சாமி கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.