விருதுநகர்

அருப்புக்கோட்டையில் வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டம்

DIN

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகம் முன்பாக, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
        இப்போராட்டத்துக்கு, அச்சங்கத்தின் அருப்புக்கோட்டை கிளைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். அப்போது அவர், 7 அம்சக் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து, சங்க உறுப்பினர்கள்  ஒன்றுகூடி, தமிழ்நாடு அரசு  தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர் முழக்கமிட்டனர்.
    பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த உள்ளிருப்புப் போராட்டத்தில், சுமார் 80-க்கும் மேற்பட்ட வருவாய் கிராம ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT