விருதுநகர்

சிவகாசியில் இன்று மாநில  அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி தொடக்கம்

DIN

தமிழ்நாடு கைப்பந்துக் கழகம், விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழகம், சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, சிவகாசியில் உள்ள மூன்று  சுழற்சங்கங்கள்  ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான மகளிர் கைப்பந்துபோட்டி(ஹேண்ட்பால்)  சனிக்கிழமை (அக். 13) தொடங்குகிறது. 
இப்போட்டிகள் சிவகாசி -விளாம்பட்டி சாலையில் உள்ள ஜேஸீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும். போட்டியின் தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் அசோஷியேசன் இணைச் செயலாளர் ஏ.சரவணன், அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் சி.அசோக், பள்ளி முதல்வர் எஸ்.சித்ரா ஜெயந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 14) நிறைவடைகின்றன.  அன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு காளீஸ்வரி கல்லூரி தாளாளர் ஏ.பி.செல்வராஜன் பரிசளிக்கிறார். இதற்கான ஏற்பாட்டினை விருதுநகர் மாவட்ட கைப்பந்துக் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT